நைஜீரியாவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: பலர் மாயம்; பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..!
More than 100 dead in Nigeria floods
மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் மக்வா நகரில் நேற்றுமுதல் கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்வா நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில், 111 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட்டுள்ளனர். சந்தை பகுதியில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிவதோடு, பலர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெருவெள்ளத்தினால் ஏராளமான மக்களின் உயிர்கள் தற்போது அபாயத்தில் உள்ளது என்றும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறதாக தெரிவித்துள்ளார்.
English Summary
More than 100 dead in Nigeria floods