ரஷ்ய நகரில் உக்ரைன் படைகள் ஏவுகணை தாக்குதல்.! 4 பேர் பலி.!
Missile attack by Ukrainian forces in Russian city
ரஷ்ய நகரில் உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த உள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. போரினால் இரு நாட்டின் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இப்போரில் உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதாரம் மற்றும் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனின் எல்லையில் உள்ள ரஷ்யாவின் பெல்கொரோட் நகர் மீது உக்ரைன் படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 வீடுகள் மற்றும் 21 அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் உக்ரைனின் இந்த ஏவுகணை தாக்குதலால் பெல்கொரோட் நகரில் 4 பேர் உயிரிழந்தாகவும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Missile attack by Ukrainian forces in Russian city