பாகிஸ்தான் || மனைவியை கொன்று பானையில் கொதிக்க வைத்த கொடூரம்.. குழந்தைகளின் கண்முன்னே நடந்த அவலம்..!
Man killed his wife In pakistan
மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆஷிக் என்பவர் வாட்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி நக்ரீஸ் என்ற மனைவியும் 6 குழந்தைகளும் உள்ளனர். மனைவியை சட்டவிரோதமான உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். ஆனால்,அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர் மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். உலோகபானையில் கொதிக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவரது மகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதற்குள் அவர் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் முன்னிலையில், அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அந்த பெண்ணின் கால்கள் வெட்டப்பட்டு உலோகபானையில் கொதிக்கவைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
குழந்தைகள் முன்னிலையில் நடந்த அந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
English Summary
Man killed his wife In pakistan