பப்புவா நியூ கினியாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பியில் இன்று(செவ்வாய்க்கிழமை) 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது போர்ட் மோர்ஸ்பிக்கு வட-வடமேற்கில் 448 கிலோமீட்டர் (278 மைல்) தொலைவில், பூமிக்கு அடியில் 200 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டு உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 6.2 ரிக்டர் அளவில் பப்புவா நியூ கினியாவில் உள்ள காண்ட்ரியன்nபகுதியில் 38.2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Magnitude 6 point 2 earthquake strikes Papua New Guinea


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->