இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.398-ஆ...? ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்தது ஏன்...?
liter petrol Sri Lanka really 398 Why did price rise second time just one week
இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. லிட்டருக்கு பெட்ரோல் ரூ.398, டீசல் ரூ.382, மண்ணெண்ணெய் ரூ.255 என 25-30% வரை விலையேற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரமே 8% உயர்வு அறிவித்த நிலையில், மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழி எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் தாக்கம் உலகளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த, அதன் அதிர்வை இலங்கையும் உணர்கிறது.இறக்குமதியையே சார்ந்துள்ள மலேசியா, தென் கொரியா,இலங்கை, சிங்கப்பூர், ஈரான் போன்ற நாடுகளில் இருந்து எரிபொருள் பெறுகிறது.
தற்போது விநியோகம் தடுமாறியதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது.2022 பொருளாதார நெருக்கடியை நினைவுபடுத்தும் இந்த நிலை, மீண்டும் மக்கள் மீது செலவுசுமையை அதிகரிக்கும் அச்சத்தை எழுப்பியுள்ளது.
English Summary
liter petrol Sri Lanka really 398 Why did price rise second time just one week