திடீர் ஷாக்... ஜப்பான் தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான், டோக்கியோவில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12 .12  மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. 

சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கம் கிழக்கு சிபா மாகாணத்திற்கு அருகே 35.2 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 104.5° தீர்க்க ரேகையில் கணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் 23 வார்டுகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Japan tokyo earthquake


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->