ரூ.3,400 கோடி சொத்துகளை ஏழை மாணவர்களுக்கு நாகொடையாக கொடுத்த ஜாக்கிசான்! - Seithipunal
Seithipunal


அதிரடியான ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் ரசிகர்களை வசீகரித்தவர் ஜாக்கிசான். போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் உள்ளிட்ட வெற்றி படங்களை வழங்கிய அவர், பல மொழிகளில் திரையிடப்பட்டுள்ள உலக பிரசித்தி பெற்ற நடிகராக திகழ்கிறார்.

தற்போது ஜாக்கிசான் நடிக்கும் கராத்தே கிட் 2 திரைப்படம் விரைவில் வெளியானவிருக்கிறது.

இந்த நிலையில், ஜாக்கிசான் தனது ரூ.3,400 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலமாக நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதி, ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் இயற்கை பேரிடர்களுக்காக பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைப் பற்றிப் பேசும் அவர், “எனது சிறுபிள்ளை பருவம் வறுமையுடன் தான் கடந்தது. அந்த வேதனையை நன்கு அறிந்தவன் நான். அந்த அனுபவங்களை பிறர் சந்திக்கக்கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். பிறருக்கு உதவும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு மாறில்லை,” என உணர்வுபூர்வமாகக் கூறியுள்ளார்.

ஏழைகள் நலனுக்காக தனது சொத்துகளைத் தாராளமாக வழங்கிய ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகளும் புகழ்ச்சிகளும் குவிந்து வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

japan Jackie Chan Donation Student education


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->