ஜம்மு காஷ்மீர் | ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் அருகே உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் அதிக அளவில் நீரோட்டம் இருந்ததால் படகு கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

படகில் 7 குழந்தைகள் உட்பட மொத்தம் 15 பேர் பயணித்ததாகவும் அதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படை, ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir Boat overturned river


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->