போர் நிறுத்த விதிமீறல்; வடக்கு காசா முனை பகுதியில் நடமாடிய பயங்கரவாதிகள்'; துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல் படை ..! - Seithipunal
Seithipunal


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வடக்கு காசா முனை பகுதியில் ஜெருசலேம் பிரிகேட் படையினர் செயல்பட்டு வருகின்றனர். சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் சிலரை மஞ்சள் லைன் பகுதியருகே அடையாளம் கண்டு அவர்களை கலைக்க இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய பின்னரும்,03 பயங்கரவாதிகள் படையினரை நோக்கி வந்துள்ளனர். அத்துடன், படை வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று வேறு இரு சம்பவங்களும் நடந்துள்ளன. குறித்த மூன்று  சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கியதோடு, தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை விரட்டியடித்துள்ளது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்தனரா..? என்பது குறித்த விவரங்களை இஸ்ரேல் படை தெரிவிக்கவில்லை. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மஞ்சள் கோட்டு பகுதியில் இஸ்ரேல் படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறித்த மஞ்சள் லைன் பகுதியின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாதிகள் நுழைவதற்கு தடையும் விதித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli forces opened fire on terrorists operating in the northern Gaza Strip


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->