தீவிரமடையும் காசா, இஸ்ரேல் போர்..வான்வழி தாக்குதலில் 23 பேர் பலி!
Israel Gaza war intensifies Air strike kills 23
இஸ்ரேல் ராணுவம காசாவின் ராபா பகுதியை நோக்கி குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பள்ளிக்கூடம் உள்பட அப்பகுதி கட்டிடங்கள் தீப்பிடித்து இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காசா - இஸ்ரேல் இடையேயான போர் நீடித்து வருகிறது.2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் காசா - இஸ்ரேல் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றும் இஸ்ரேல் ராணுவம காசா மீது அதிபயங்கர தாக்குதலில் ஈடுபட்டது.அப்போது காசாவின் ராபா பகுதியை நோக்கி குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் உள்பட அப்பகுதி கட்டிடங்கள் தீப்பிடித்து இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Israel Gaza war intensifies Air strike kills 23