ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது..காமேனி எக்ஸ் தள பதிவால் பரபரப்பு!
Iran will never seek refuge Excitement caused by Kameny Xs platform
ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கி, ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்த தாக்குதலுக்கு இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது., போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை கூறியுள்ளது.
இந்த நிலையில், ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திய பின்னர், காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
English Summary
Iran will never seek refuge Excitement caused by Kameny Xs platform