ஜெர்மனி : ரசாயன தாக்குதல் நடத்த வந்த ஈரானிய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டில் உள்ள டார்ட்மண்ட் பகுதி அருகே கேஸ்டிராப்-ராக்சல் என்ற இடத்தில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும் வகையில் திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, அந்த நபர் சையனைடு மற்றும் ரிசின் உள்ளிட்ட நச்சு பொருட்களை விலைக்கு வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. 

அதன் பின்னர் ஈரானிய நாட்டை சேர்ந்தவரான அந்த நபரை போலீசார் கைது செய்து காவலில் கொண்டு வந்தனர். மேலும், அவரது வீட்டையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபடத் தொடங்கினர். 

இந்த சம்பவம் குறித்து, டஸ்செல்டார்ப் போலீஸ், ரெக்லிங்ஹாசென் போலீஸ் மற்றும் முன்ஸ்டர் போலீசார் உள்ளிட்டோர் இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 

"நீதிபதி ஒருவரின் உத்தரவின் படி, நாங்கள் இந்த சோதனையை நடத்தி உள்ளோம். குற்றவாளி தீவிர வன்முறை செயலுக்கு தயாராகி வந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

குற்றவாளி சையனைடு மற்றும் ரிசின் உள்ளிட்ட நச்சுப் பொருட்களை வாங்கி இருப்பது இஸ்லாமிய தூண்டுதலின் படி, நாட்டில் தாக்குதலை நடத்த கூடிய ஆபத்து காணப்படுகிறது. இது தொடர்பாக குற்றவாளியுடன் சேர்த்து மற்றொரு நபரையும் காவலுக்கு எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

அவர்களிடம் இருந்து சான்றுகள் கைப்பற்றப்பட்டு அவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. கைது வாரண்டுக்கான நீதிபதியின் உத்தரவை பெற்ற பின்பு இதுகுறித்து முடிவு செய்யப்படும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

iran man arrested for plan to chemical attack on germany


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->