அமெரிக்காவில் மர்ம முறையில் உயிரிழந்த இந்தியர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மர்ம முறையில் உயிரிழந்த இந்தியர் - நடந்தது என்ன?

அமெரிக்கா நாட்டில் உள்ள மேரிலேண்ட் நகரில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட அங்கித் பாகாய் என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஒன்பதாம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் வீடுதிரும்பவில்லை. வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அந்த நபரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதையடுத்து அவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் காணாமல் போன நபரை பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் ஒட்டி தேடி வந்துள்ளனர். 

இந்த நிலையில் காணாமல் போன அந்த நபர் அபகுதியில் உள்ள சர்ச் ஏரியில் விழுந்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் படி, அந்த நபரை நீரில் தேடும் சோனார் கருவியின் உதவியுடன் தேடியுள்ளனர்.

அப்போது ஒரு வாலிபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த உடல் அங்கித் பாகாய் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா? வேறு யாராவது தள்ளி விட்டார்களா? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian man died in america Maryland


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->