இந்தோனேசியா நாட்டில் திடீர் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அதிர்வுகள் அருகிலுள்ள இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா, பான்டென் மாகாணம், மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தால் ஆன சேதாரங்கள் குறித்தும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in indonesia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->