மீண்டும் இருளில் மூழ்கிய நாடு.! மக்களின் இயல்பு வழக்கை முடங்கியது.!!
in this country untill 1 weak power cut
எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் அரசியல் குழப்பம் தற்போது நிலை வருகிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் பெரும் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 22 மாநிலங்களில் சுமார் ஒரு வாரத்திற்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மக்களிடையே கடும் அவதிக்கு உள்ளாகியது குறிப்பைடத்தக்கது.
English Summary
in this country untill 1 weak power cut