உலகை உலுக்கிய சிறுவனின் மரணம்... பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்.!!
in Syria refugee child died in 2015 court order boat driver jail
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருவதால் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல துவங்கினர். இவர்கள் அங்குள்ள மத்திய தரைக்கடல் பகுதியின் வழியாக சட்டவிரோத முறையில் படகு பயணம் மேற்கொண்டு வந்தனர்.
இவர்களின் பயணம் சில நேரத்தில் பெரும் விபத்தில் சிக்கும் நிலையில், கடந்த 2015 ஆம் வருடத்தில் அகதியாக படகில் பயணம் செய்த துருக்கி கப்பல் விபத்துக்குள்ளாகி 3 வயதாகும் ஆண் குழந்தை உட்பட 12 பேர் பலியாகினர்.
இதில் குழந்தையின் உடல் அங்குள்ள துருக்கி கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் கடற்கரையில் கரையொதுங்கவே, இது தொடர்பான புகைப்படம் வெளியாகி உலகை உலுக்கியது. மேலும், சர்வதேச அளவில் பெரியளவிலான விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த படகை இயக்கி சென்ற 3 பேர் துருக்கிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இவர்கள் மூவருக்கும் 125 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Syria refugee child died in 2015 court order boat driver jail