நேபாள வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பரிதாப பலி.! அடுத்தடுத்து நேர்ந்த பெரும் சோகம்.!!
in nepal flood peoples died 60
இந்தியாவின் அண்டை நாடக இருந்து வரும் நாடு நேபாளம். இந்த நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளமானது சூழ்ந்தது.
அங்குள்ள வீடுகள் அனைத்தும் மின்சாரம் இன்றி இருக்கும் நிலையில்., நாட்டில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளதால் அங்கங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில்., இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 28 பேர் பலியாகியுள்ளதாகவும்., மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பிற விபத்துகளின் காரணமாக 32 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாது தற்போது வரை சுமார் 24 பேர் காணவில்லை என்றும்., 18 பேர் படுகாயமடைந்தாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in nepal flood peoples died 60