உளவுத்துறை வெளியிட்ட ரகசிய தகவல்.. கன்னியாகுமரியில் கைதான ஐ.எஸ் பயங்கரவாதி..!!
in kanniyakumari terrorist arrest by police investigation going on
இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தினமும் பல்வேறு விதமான சண்டைகள் எல்லையில் நடந்து வரும் நிலையில்., இந்தியாவிற்கு உள்ளேயே பயங்கரவாததிற்கு உதவி செய்யும் நபர்கள் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்., வரும் 25 ஆம் தேதியன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்., தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார். இந்த சமயத்தில்., பாதுகாப்பை பலப்படுத்தி வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் அடிப்படையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில்., இந்து அமைப்பினை சார்ந்த தலைவர்களை நான்கு பேர் கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவலை உளவுத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில்., இவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நால்வரில் ஒருவராக இருந்த நபராக அலி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும்., இவரிடம் இருந்து மடிக்கணினி போன்ற பல்வேறு பொருட்களை கைப்பற்றியுள்ள நிலையில்., 4 பேர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர்கள் என்று காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari terrorist arrest by police investigation going on