8 பேர் சரமாரியாக சுட்டுக்கொலை.. வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.. ஜெர்மனியில் பயங்கரம்.!!
in Germany peoples gun fired peoples died
ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹனாவ் நகரின் மதுபான விடுதியில் சில மர்ம நபர்கள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் மேற்கொண்டனர். இவர்கள் அங்கிருந்த மக்களை மிரட்டி சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்த துவங்கியுள்ளனர்.
இதனைப்போன்று இந்த மதுபான விடுதிக்கு அருகேயுள்ள மற்றொரு விடுதியிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த கொடூரத்தை அரங்கேற்றிய கும்பல் தப்பி சென்ற நிலையில், இது தொடர்பான தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்த நபர்களை மீது சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கி சூடு எதற்க்காக? யாரால்? நடத்தப்பட்டது என்பது தொடர்பான விபரம் வெளியாகவில்லை. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Germany peoples gun fired peoples died