சிறிய பூச்சி கடித்ததால் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்.! தாயாரின் அலட்சியத்தால் காத்திருந்த பெரும் சோகம்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாநிலத்தை சார்ந்தவர் கெய்லா ஆல்ப்ஸ். இவருக்கு இரண்டு வயதுடைய மகன் உள்ளார்., அவரது பெயரின் பெயர் ஜாக்சன் ஆல்ப்ஸ். இந்த குழந்தைக்கு கடந்த வாரத்தின் போது திடீரென கடுமையான காய்ச்சலானது ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தைக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று எண்ணி மருந்துகளை வழங்கியுள்ளனர். 

குழந்தைக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கியும் உடல் நலம் தேறாததை அடுத்து., அதிர்ச்சியடைந்த பெற்றோர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விஷயமாக உடல் முழுவதும் சிவந்த புள்ளிகள் தோன்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியான கெய்லா., உடனடியாக குழந்தையை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். 

மருத்துவமனைக்கு சென்ற சில மணித்துளிகளிலேயே குழந்தை மயக்கமடையவே., குழந்தையை தீவிர சிகிச்சைக்கு உடபடுத்தியுள்ளனர். இந்த சமயத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சியாக சுயநினைவை இழந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்த மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கடைசி கட்ட சிகிச்சை உதவியதை அடுத்து குழந்தை மீண்டும் தனது உயிரை பெற்றுள்ளது. 

இது குறித்து குழந்தையின் தாயார் தெரிவித்தாவது., குழந்தை வீட்டில் விளையாடி கொண்டு இருந்த சமயத்தில்., தோட்டப்பகுதியில் இருந்த உண்ணியானது குழந்தையை கடிக்கவே., சிறிது நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. நான் சரியாகிவிடும் என்று இருந்த நிலையில்., திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன்., குழந்தை மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னர் சிவந்த புள்ளிகள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி., தற்போது எனது குழந்தை தேறி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in america baby have a luck before died


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->