ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
Hungarian writer Laszlo Krasznahorkai awarded Nobel Prize in Literature
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருது உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
அதன்படி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோபல் விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கம், பட்டயம், பணப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று இந்த விருது விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்காக நோபல் பரிசை ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Hungarian writer Laszlo Krasznahorkai awarded Nobel Prize in Literature