மலாவியை புரட்டி போடும் பிரெட்டி புயல் - 5.1 லட்சம் பேர் பாதிப்பு.!
five lakhs peoples affected to freddy cyclone in malavi
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. இந்த நாட்டில், சமீப நாட்களாக "பிரெட்டி" என்ற பருவகால சூறாவளி புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரு வெள்ளம் ஏற்படும் என்றும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவிற்கு காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் என்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த பிரெட்டி சூறாவளி புயலுக்கு மொத்தம் 326 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா.வுக்கான மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலின் படி, சூறாவளியால் ஐந்து லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.8 லட்சம் பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்
![](https://img.seithipunal.com/media/freddy cyclone-h72ra.png)
அதுமட்டுமல்லாமல், எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடுகிறது. அதனால் சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு, பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலைமை மோசமடைந்து வருகிறது.
மேலும், இந்த பிரெட்டி சூறாவளியின் தாக்கத்தினால், வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் இதுவரைக்கும் 5.1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த புயல் பாதிப்பால் காலரா உள்ளிட்ட நோய் பரவலுக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
English Summary
five lakhs peoples affected to freddy cyclone in malavi