"ஆபத்தான கைதியுடன்" தனிமை.. சிக்கிய சிறை பெண் ஊழியர்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஜோர்டான் மெக்ஸ்வீனிக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இவர் 'எந்த பெண்ணுக்கும் ஆபத்து' என்று அழைக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஜோர்டான் மெக்ஸ்வீனி தென்கிழக்கு லண்டனில் உள்ள பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறை கைதியான ஜோர்டான் மெக்ஸ்வீனியை, சிறைப் பெண் ஊழியர் ஒருவர் நீண்ட நாட்களாக ரகசியமாக சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து இவர்கள் தனிமையில் இருந்த புகைப்படங்கள் சிக்கியது. இதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறை பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female prison employee arrested for flirting with dangerous prisoner in England


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->