கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து.. அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


எகிப்து நாட்டில் கொரோனாவின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,700 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கொரோனா உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையாக அலெக்ஸாண்ட்ரியா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென மருத்துவமனையில் தீப்பற்றி அறிந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்துகொண்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றிக்கொண்டு இருந்தனர். 

தீ நாலாபுறமும் பரவிய நிலையில், தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும், அவர்களின் உடல் அடையாளம் காணாத அளவு இருந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Egypt Hospital fire accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->