காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று பரவல்?!
Ebola outbreak in Congo
காங்கோ நாட்டில் வடமேற்கு பகுதியில் தற்போது எபோலா வைரஸ் மீண்டும் கண்டறிப்பட்டுள்ளதாக தேசிய உயிரி மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தான்சானியாவில் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காங்கோவின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிபுணர்கள் அடங்கிய பல குழுக்கள் கண்காணிப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை நிரந்தர செயலாளர் ஆபெல் மகுபி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது,
காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று பரவலை அறிந்து எச்சரிக்கையுடன் இருந்து வருகிறோம்.
பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அரசு உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்". என்று ஆபெல் மகுபி பகுதி தெரிவித்துள்ளார்.