பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள நாடான பப்புவா நியூ கினியாவில், மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும், 61.4 கிலோமீட்டர் ஆழத்திலும் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் ஈடிபாடுகளில் சிக்கி காயமடைந்ததாகவும், சில சுகாதார மையங்கள், வீடுகள், கிராமப்புற சாலைகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு 8.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 166 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in Papua New Guinea


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->