நேபாளத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
Earthquake in Nepal Nov 08
நேபாள நாட்டில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கிலோமீட்டர் தொலைவிலும்,100 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 4.37 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிற்கும் பொக்காரா நகருக்கும் இடையே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 8,964 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Nepal Nov 08