வேகமெடுக்கும் டெங்கு: 391 பேர் உயிரிழப்பு! சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!
Dengue fever 391 deaths
தென் அமெரிக்கா, பிரேசிலில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் நாட்டின் சுகாதார துறையினர் அதனை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றன.
இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும் அதில் 12,652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்த ஆண்டு 391 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.