துருக்கி, சிரியாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.! இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காசியான்டெப் நகரில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. 

மேலும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இடிபடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12049 ஆக உயர்ந்துள்ளது. இதில், துருக்கியில் 9057 பேரும், சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased to 12 thousand in turkey sriya earthquake


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->