சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து.. 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த பட்டாசு வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக ஈடுபட்டு விட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China cracker factory accident 4 peoples death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->