அதிகாலையில் திடீரென பற்றியெரிந்த அடுக்குமாடி குடியிருப்பு: 15 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


சீனா, நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி எடுத்து வெளியே ஓடி வந்தனர்.

இருப்பினும் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

44 பேர் காயமடைந்த நிலையில் மீட்கபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். 

இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

china apartment caught fire 15 killed


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->