குழந்தைகளின் ஆபாசப் படங்கள்..29 வாட்ஸ் ஆப் குழு..வீடியோ பகிர்வு., திடுக்கிடும் தகவல்.!
children porn videos shared in whatsapp groups
ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவர் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அந்த காட்சியை வீடியோவாக எடுத்து விநியோகித்தது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்தது, மேலும் அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் தெரியவந்தது.
அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து செப்டம்பர் மாத இறுதியில் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. இந்தியாவின் 7 பேர் மீது குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் சாஹிப் என்பவனும் ஒருவன் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
children porn videos shared in whatsapp groups