சொந்த குழந்தைகளை கொலை செய்த சீக்கியர்.! கனடாவில் பரபரப்பு.!
canada father kill own childrens
கனடா நாட்டில் மான்ட்ரியல் நகருக்கு வடக்கே உள்ள லாவல் என்ற பகுதியில் கமல்ஜீத் அரோரா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரமா ராணி அரோரா.
இந்நிலையில் கமல்ஜீத், தனது 13 வயது மகள் மற்றும் 11 வயது மகனை படுகொலை செய்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், தனது மனைவியையும் அடித்து, துன்புறுத்தி, கழுத்து நெரித்து கொல்ல அவர் முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, குடும்ப வன்முறை மற்றும் கொலை தொடர்புடைய வழக்கு கமல்ஜீத் மீது பதிவாகியுள்ளது. அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை சீரடைந்து, போலீசாரின் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அவரது மூத்த மகள், இந்த சம்பவம் குறித்து அண்டை வீட்டில் வசிக்கும் ஆன்னி சார்பென்டையர் என்பவரிடம் ஓடி சென்று தகவல் அளித்துள்ளார். அதன்பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
canada father kill own childrens