போதை தலைக்கேறிய போதையில் காதலனை சூட்கேசுக்குள் வைத்து பூட்டிய போதை காதலி! போதையில் தூக்கிவிட்டதால் சூட்கேசுக்குள் காதலன் மரணம்!
Boyfriend death after being locked in a suitcase Girlfriend gets life sentence
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில், சாரா பூன் (47) என்ற பெண் மற்றும் அவரது காதலர் ஜார்ஜ் டோரஸ் (42) இடையே நடந்த சோகமான சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2020 பிப்ரவரி 23 அன்று, அதீத மதுபோதையில் இருவரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடியபோது, சாரா தனது காதலரை சூட்கேசில் அடைத்து பூட்டினார். மேலும், டோரஸ் தானாகவே வெளியே வருவார் என நினைத்து தூங்கச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை எழுந்த போது, சூட்கேசை திறந்த சாரா, தனது காதலன் மூச்சுத்திணறி உயிரிழந்ததை கண்டார். அவரின் மரணம் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்டது என புலனாய்வில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சாரா மீது கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு 4 ஆண்டுகளாக நீடித்து வந்தது. இறுதியாக கடந்த திங்கட்கிழமை நடந்த விசாரணையில், சாரா மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இந்த வழக்கில், நீதிபதி சாராவுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். இது காதலனின் மரணம் தவிர்க்கக்கூடியதாக இருந்தது என்பதை வலியுறுத்திய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மதுபோதைய தாக்கம் மற்றும் குறைந்தபட்ச நிலையான சிந்தனையின் நிகழ்ந்த பயங்கர விளைவுகளை காட்டுகிறது. மேலும், இது சமூகத்துக்கு ஒரு கடும் எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.
English Summary
Boyfriend death after being locked in a suitcase Girlfriend gets life sentence