திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது நடந்த சோகம்.. 20 பெண்கள் பலி.!!
Boat accident 20 girls
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள ஆற்றில் படகில் பயணித்தபோது அந்த படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் அடித்து சொல்லப்பட்டனர். தகவல் அறிந்து மீட்பு படையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இந்த விபத்தில், 20 பெண்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்டனர்.
மேலும், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. அதிக அளவிலான மக்களைப் படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.