கருணைக் கொலை செய்ய பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


**கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வை முடிக்க அனுமதிக்கும் மசோதா பிரிட்டன் கீழவையில் நிறைவேற்றம்**

பிரிட்டனில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுவோருக்கு, தங்களது வாழ்க்கையை முடிக்கச் சட்ட அனுமதி அளிக்கும் மசோதா, நாடாளுமன்ற கீழவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் 314 எம்.பிக்கள் ஆதரவாகவும், 291 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். இப்போது, இந்த மசோதா மேலவைக்கு செல்லும். அங்கு சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளவோ அல்லது சட்டமாக்கலில் காலதாமதம் ஏற்படுத்தவோ முடியும். ஆனால், கீழவை ஒப்பந்த மசோதாவை மேலவை நிராகரிக்க முடியாது.

சட்டமாகும் பட்சத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணமடைய முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்களே மருந்து எடுத்துக்கொள்ளும் ஆற்றல் உடையவராக இருந்தால், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் வாழ்நாளை முடிக்க விண்ணப்பிக்கலாம்.

இதனால் மரணத் தீர்மானம் தனிப்பட்ட மனித உரிமை என்ற கோணத்தில் பார்வையிடப்படுவதற்கான புதிய சட்டப்பாதை உருவாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

biritish parliament


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->