அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்.! நடந்தது என்ன?
air india flight emergency landing in sweedan airport
அமெரிக்கா நாட்டில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் இருந்து இருநூற்றுத் தொன்னூற்று இரண்டு பயணிகள் உள்பட முந்நூற்று பதினொரு பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து இந்த விமானம் ஸ்வீடன் அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் ஒரு எஞ்சினில் இருந்து திடீரென எரிபொருள் கசிந்துள்ளது. இதைப்பார்த்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஸ்வீடன் தலைநகரில் உள்ள ஸ்டாக்லோம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கி உள்ளனர்.
இதையடுத்து, அங்கு விமானத்தில் உள்ள எஞ்சினில் எரிபொருள் கசிவதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
English Summary
air india flight emergency landing in sweedan airport