#திருச்சி || அதிமுக பிரமுகரின் மகன் பட்டப்பகலில் வெட்டி கொலை.!
AIADMK executive son hacked to death in Trichy
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் முத்துக்குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் முத்துக்குமாரை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உளளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
English Summary
AIADMK executive son hacked to death in Trichy