ஆப்கானிஸ்தான்: பெண்கள் ஆண் துணையில்லாமல் பயணம் கூடாது - தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி.! 
                                    
                                    
                                   AFGHAN NEW LAW FOR WOMAN 
 
                                 
                               
                                
                                      
                                            ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மதத்துக்குள் இருக்கும் பிரிவினைகள் (அதாவது இந்து மதத்தில் சாதி பிரிவினை என்று சொல்வதுபோல, இஸ்லாமிய மதத்திலும் பல பிரிவுகள் உள்ளது, அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கை) தாலிபான்களால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை.
மேலும், தாலிபான்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சட்டங்களை கொண்டு வருவதற்கு முழு முயற்சியில் இறங்கியுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாத சட்டம் என்பது பெண்களுக்கு எதிரானதாக உலகம் முழுவதும் சொல்லப்படுகிறது.

பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பதுதான் தாலிபான்களின்  அந்த சட்டங்கள் அமைகின்றன. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்து தாலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி பயணம் செய்யக்கூடிய பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும் என்றும், ஹைஜாப்  அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பயணம் செய்யும் வாகனங்களில் பாடல்கள் கேட்க கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஏற்கனவே பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை அந்த நாட்டில் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.