3-வது முறையாக கெடு! மீண்டும் 90 நாட்களுக்கு டிக் டாக் செயலி நீடிப்பு! - அதிபர் டிரம்ப் - Seithipunal
Seithipunal


உலகளவில் பிரபலமாக 'டிக் டாக்' எனப்படும் மொபைல் போன் செயலி உள்ளது. இது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். இதனை வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.மேலும், சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது.

இதன் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி,அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு முன்னாள் அதிபர் 'ஜோ பைடன்' தடை விதித்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், 'இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை' என்று தெரிவித்தது.

மேலும், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை, கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை 3 -வது முறையாக, மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3rd time TikTok extension for another 90 days President Trump


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->