ஈராக்கில் தொடரும் வன்முறை.! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


ஈராக்கில் முகமது அல்-சூடானி தலைமையில் புதிய அரசு அமைவதற்கு நாடு முழுவதும் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக ஈராக் நாடாளுமன்றத்திற்கு நுழைந்தும், முற்றுகையிட்டும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட பாக்தாத் முழுவதும் அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு இடைக்கால பிரதமர் முஸ்தபா அல் கதாமி நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 died in Iraq violence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->