பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் பலி, 23 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் தற்கொலை படை  தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் உள்ள பலிளி பகுதியில் இன்று நடைபெற்ற போலியோ மருந்து முகாமிற்கு பாதுகாப்பு பணிக்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். 

அப்போது, போலீஸ் வாகனத்திற்கு அருகே தற்கொலை படையை சேர்ந்தவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார். இந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்த நிலையில், 20 போலீசார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்கள், குழுக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed 23 injured in suicide bomb attack in Pakistan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->