நேபாளத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்.. 3 பேர் பலி.!
3 continue earthquake in Nepal 3 peoples death
நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நேபாள நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள நாட்டின் மேற்கே நேற்று இரவு 9:07 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9:56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இன்று அதிகாலை 2:12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகளில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து 3 பேர் இடுப்பாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
3 continue earthquake in Nepal 3 peoples death