ரஷ்யா :: முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து - 20 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் பல முதியோர் பாதுகாப்பாகங்கள் முறையாக பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றன. இதில் ரஷ்யாவின் வடக்கு பகுதியான சைபிரியா நகரில் கெமரோவோ பகுதியில் முறையாக பதிவு செய்யப்படாத முதியோர் காப்பகத்தில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் காப்பகத்தில் தங்கியிருந்த முதியோர்கள் உடனடியாக வெளியேர முடியாமல் சிரமப்பட்ட நிலையில், தீயானது நன்கு கொழுந்து விட்டு எறிந்து வேகமாக அடுத்த தளத்திற்கும் பரவியது. இதில் இரண்டாம் தளம் முழுவதும் எரிந்து நாசமாயின.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் 20 முதியவர்கள் உயிரிழந்ததாக டாஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா முழுவதும் பதிவு செய்யப்படாமல் பல முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அவை தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால் ஆய்வு மேற்கொள்ள முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 Killed After Fire Breaks Out At Home For Elderly in Russia


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->