அமெரிக்கா : பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டவுன்டவுன் விளிம்பில் உள்ள டெஸ் மொயின்ஸ் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பள்ளி மாவட்டத்துடன் இணைந்த ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியரில் நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து காவல்துறையினர் ஏற்று மதியம் ஒரு மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இரண்டு மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பள்ளி ஊழியர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்த சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, 2 மைல் தொலைவில் ஒரு காரை நிறுத்தி 3 சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 students killed in shooting at school in America


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->