ஜெர்மனி: பள்ளி அருகே துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் பள்ளி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஜெர்மனியின் வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) 81 வயது முதியவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடையவர் காயமடைந்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய முதியவரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு காயமடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் ஆரம்ப பள்ளிக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 injured in shooting in Germany school near


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->