துருக்கியிலிருந்து கிரீஸ் சென்ற 2 படகுகள் கவிழ்ந்து விபத்து - 18 பேர் பலி - Seithipunal
Seithipunal


மேற்கு ஆசிய நாடான துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படகு கிரீஸ் நோக்கி செல்லும் வழியில் லெஸ்போஸ் தீவு அருகே பலத்த காற்றினால் படகு நிலைகுலைந்து கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் 40 பெண்கள் பயணித்த நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் மீட்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும் மீதமுள்ள 15 பெண்களை ஹெலிகாப்டர் மற்றும் கடற்படை படகுகளுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே சமயத்தில் 95 அகதிகளுடன் பயணித்த மற்றொரு படகு கைதிரா தீவு அருகே பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 80 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாக கிரீஸ் கடற்படை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 killed two boat capsizes in Greece


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->