ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - சிறுவா்கள் உள்பட 15 போ் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலிருந்து உள்ளூர்வாசிகள் அவ்வப்பொழுது எரிபொருள் தேவைக்காக விறகு மற்றும் மரங்களை வெட்டுவதற்கு கடற்கரை நகரமான சோகோடோவிற்கு செல்வது வழக்கம். 

இந்நிலையில் நேற்று சிறுவர்கள் உட்பட 36 பயணிகளுடன் விறகு தேடுவதற்காக சோகோடோவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது சோகோடோ நகரத்திற்கு அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து தகவலறிந்து கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.

இதுதொடர்பாக கடலோர காவல் படையினர் கூறும் பொழுது, இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீதமுள்ள 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பாரம்பரியத்தின் படி அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 died as boat capsizing in Nigeria


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->