துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.! 11 பேர் உயிரிழப்பு.!
11 died in boat capsized in tunisia
வட ஆப்பிரிக்கா நாடான துனிசியாவில் வறுமை மற்றும் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்கின்றனர். மேலும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மத்திய கரைகடல் வழியாக 52000 பேர் சட்டவிரோதமாக தப்ப முயன்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துனிசியாவின் ஸ்பாக்ஸ் மாகாணத்திலிருந்து 37 அகதிகள் இத்தாலி நோக்கி படகில் சென்று கொண்டிருந்தபோது, மத்திய தரைக்கடலில் மஹ்தியா பகுதிக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து, மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
11 died in boat capsized in tunisia