ஏமனில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


ஏமனில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆளும் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு இரு தரப்புகளும் சண்டையை நிறுத்துவதாக அறிவித்தன.

இருப்பினும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஏமனில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டேஸ் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடுதலில் ஈடுபட்டனர்.

அரசின் ராணுவ வீரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 7 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக வன்முறை அதிகரிக்கும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 died in attack on soldiers in yemen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->